விரைவில் மீண்டும் உற்பத்திகள் தொடங்கப்படும் – ரஷ்யாயிடம் உலகின் முன்னணி நிறுவனங்கள் தெரிவிப்பு!

Friday, March 11th, 2022

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில் ரஷ்யா குறித்த நிறுவனங்களுக்கு எதிராக கடும் மிரட்டலை விடுத்துள்ளது.

இதனால் தமது உற்பத்தியை மீண்டும் ரஷ்யாவில் தொடங்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 2 வாரத்திற்கும் மேலாக போரை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா, வோக்ஸ்வேகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோர்டு, பி.எம்.டபிள்யூ. (Toyota, Volkswagen, Jaguar, Land Rover, Mercedes-Benz, Ford, BMW) ஆகிய ஓட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: