யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!

Monday, March 7th, 2022

யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு யுக்ரைனின் பிரதான நகரங்களில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேறி வருவதாக புட்டின் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுதல் காரணமாக மரியுபோல் நகரில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் முயற்சி இன்று இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

அந்நகரம் இன்னும் மின்சாரம் மற்றும் நீரின்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே, மத்திய யுக்ரைனில் உள்ள வின்னிட்சா விமான நிலையம் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டதை யுக்ரைன் ஜனாதிபதி உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: