மே மாதம் 8 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்!
Thursday, February 28th, 2019தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ஆம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகபூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அந்தவகையில், மே 8-ம் திகதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஐரோப்பா உறுதியாக வேண்டுமானால் பிரான்ஸ் – ஜேர்மனி திடமாக இருக்க வேண்டும் - ஜேர்மனிய அதிபர்!
பொதுநலவாய ஒன்றிய நிதி அமைச்சர்களின் கூட்டம்!
ஜப்பானில் வெப்பஅலை வானிலை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|