மெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி!

சீனாவில் மெகி புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள ஜெஜியாங் மாகாணத்தில் காணாமற்போயுள்ள 17 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சுசுன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் காணாமற்போயினர். இதில் 16 பேரின் உடல்களை மாத்திரம் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மெகி புயலால் தென்கிழக்கு சீனாவும் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 4 பேர் பலியாகியுள்ளதுடன், 268 பேர் காயமடைந்துள்ளனர்.
Related posts:
மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது!
குடும்ப காரணத்திற்கு நியூஸி. பிரதமர் கீ திடீர் இராஜினாமா!
அமெரிக்க - தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி நிறுத்தம்!
|
|