மியான்மரில் மனித உரிமை மீறலா? விசாரணை நடத்திட ஐ.நா கோரிக்கை!

Tuesday, October 25th, 2016

மியான்மரில் உள்ள பிரச்சனை நிகழும் மேற்கு பகுதியான ரக்ஹீன் மாநிலத்தில் ஒன்பது போலீஸார் கொல்லப்பட்ட பின்னணியில், அங்குள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்திட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு நிபுணர்கள் அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரக்ஹீன் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளை அந்நாட்டு ராணுவம் மூடியுள்ளது.ஆனால், ராணுவத்தின் இந்த முயற்சி, அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க இயலவில்லை.

மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூ சியை வருத்தமடைய செய்யும் எந்த செய்தியையும் கூற அந்நாட்டில் உள்ள ராஜிய அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதால், இந்தப் பிரச்சனை மிகவும் நுண்ணியமாக அணுக வேண்டிய ஒன்று தெரிவிக்கப்படுகின்றது.

_92076933_614881350

Related posts: