மலேசியா மக்கள் வட கொரியாவுக்கு செல்ல தடை!

Friday, September 29th, 2017

தமது நாட்டு மக்கள் வட கொரியாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேஷியா தெரிவித்துள்ளதாக மலேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவில் சுமூகமான நிலைமை ஏற்பட்டவுடன் குறித்த தடை நிவர்த்திக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் எதனையும் செவிமடுக்காது வட கொரியா தொடர்ந்தும் ஹைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை நடத்தி வருவதாகவும் மலேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: