பெரிய அணை உடைப்பால் 42 பேர் உயிரிழப்பு!
Friday, June 15th, 2018கென்யாவில் உள்ள பட்டேல் என்ற பெரிய அணை ஒன்று உடைந்ததால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ள சோலை என்ற ஏழ்மையான கிராமத்தில் விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் ஏழுக்கும் அதிகமான தனியார் அணைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய அணையான பட்டேல் அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் வந்தது.
இதில் 42 பேர் உயிரிழந்ததுடன் 2 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
சவுதியில் விண்ணைத் தொடும் உலகின் பிரம்மாண்ட மாளிகை!
இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் - உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
|
|