பிலிப்பைன்ஸில் 50 போலிசார் இடைநீக்கம் !
Friday, October 21st, 2016
கடந்த புதன்கிழமையன்று, பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மோதலில் ஈடுபட்ட சுமார் ஐம்பது போலிஸ் அதிகாரிகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையின் தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதலுக்கு உள்ளான போலிஸ் வாகனம் ஒன்று, கூடியிருந்த கூட்டத்தினர் மீது மோதியபடி சென்றதில் பலர் இடித்து கிழே தள்ளப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவின், அமெரிக்காவை குறைந்து சார்ந்திருக்கும் வெளியுறவு கொள்கை மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Related posts:
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? நவம்பர் 8 தேர்தல்!
குவைற்றிலிருந்து வட கொரியர்கள் வெளியேற்றம்!
சவுதி இளவரசர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானியா விஜயம்!
|
|