பிரான்சில் தீ விபதது – வீடொன்றில் இருந்த தாய் மற்றும் 7 குழந்தைகள் உயிரிழப்பு!

Tuesday, February 7th, 2023

பிரான்சின் வடக்குப் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

பாரிஸில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 10 வருடங்களின் பின்னர் அந்நாட்டில் பதிவாகியுள்ள மிக மோசமான தீ விபத்து இதுவென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாய் தனது குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது தீ பரவியதாக கூறப்படுகிறது.

தீ விபத்தின் போது தந்தையும் வீட்டில் இருந்துள்ளதுடன் அவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: