இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு தொற்றுறுதி!

Monday, August 31st, 2020

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களுக்கே அதிகளவில் கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 79 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 இலட்சத்து 77 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான ஒரு கோடியே 76  இலட்சத்து 98 ஆயிரத்து 622 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: