நான்காவது தடவையாகவும் முதலமைச்சராக எட்டியூரப்பா!

Wednesday, July 24th, 2019

இந்தியாவின் – கர்நாட்டகா மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாகவும் பி.எஸ்.எட்டியூரப்பா பதவி ஏற்கவுள்ளார்.

14 மாதங்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்று தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. காங்கிரஸ் – ஜனதா டால் கட்சியினர் அங்கு ஆட்சி அமைத்திருந்தனர்.

எனினும் அதன் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகியதை அடுத்து, ஆட்சி கவிழந்தது.

நேற்று கர்நாடக சட்ட சபையில் கள சோதனை நடத்தப்பட்டு, அரசாங்கம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் – ஜனதா டால் கட்சி 99 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வி கண்டநிலையில், பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுக் கொண்டது. 225 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்ட சபையில் நேற்று 20 பேர் சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: