பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை !

Sunday, August 23rd, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லையென டெல்லி இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், வென்ரிலேற்றர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த இரத்தக் கட்டியை அகற்ற டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.இராணுவ மருத்துவமனையில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமையும் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றதால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts: