பாரிய காட்டுத் தீ விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 24th, 2018

கிரீஸில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரீஸ் தலைநகர் ஏதென்சின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது.
இதனால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அவ்வழியாக சென்ற பயணிகளில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 56-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கிரீஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கு ஏதென்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளின் உதவியை கிரீஸ் அரசு நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: