பாப்புவா நியூகினியில் பாரிய  நிலநடுக்கம்: 30க்கு அதிகமானோர் பலி

Wednesday, February 28th, 2018

கடும் நிலநடுக்கத்திற்குள்ளான பாப்புவா நியூகினியில் 30ற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளதாகவும் சுமார் 300 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் அறிக்கைவெளியிட்டுள்ளனர்.

7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பாப்புவா நியூகினியின் எங்கா மாநிலத்தின் மலைப் பகுதியில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடும் அதிர்வுகளும் பாதிப்புகளும் நேர்ந்ததாகக்கூறப்பட்டது.

இந்நிலையில் நிலநடுக்கம் தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில் 30ற்கும் அதிகாமானோர் பலியாகி இருக்கலாம் எனவும் 300 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: