பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்ரேலிய நிவாரண உதவி!

Tuesday, May 30th, 2017

அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜூலி பிசொப் தமது நாட்டு அரசாங்கம் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவஸ்ரேலிய அரசாங்க 5 இலட்சம் டொலர்களை அவசரத்தேவைக்காக இலங்கைக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தன்து ருவிற்றர் பக்கத்திலும் குறிப்பிட்டள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,வள்ளங்கள் , மீட்பு நடவடிக்கைகளுக்கான வள்ளங்கள் நீர்சுத்திகரிப்பு சிறுவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்திற்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கான சுகாதாரசேவைக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் இதில் அடங்கியுள்ளன.நாம் தொடர்ந்தும் நிலைமைகளை அவதானிப்பதுடன் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: