16 பேரின் உயிரை பலி கொண்ட குரங்கு..!

Wednesday, November 23rd, 2016

லிபியாவில் பழங்குடி மக்கள் வசிக்கும் சபா எனும் நகரில் இடம்பெற்ற கலவரத்தில் 16 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அந்த வழியாக சென்ற சிறுமிகள் மீது குரங்கை இளைஞர்கள் சிலர் ஏவி விட்டுள்ளனர்.

குரங்கு சிறுமிகள் மீது ஏறி சேட்டை செய்துள்ளதுடன், சிறுமி ஒருவரின் முகத்திரையையும் கிழித்து எறிந்துள்ளது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் தப்பி ஓடி தமது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், குரங்கை ஏவிய மூவரையும் குரங்கையும் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனையடுத்து தங்களது இனத்தவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த உயிரிழந்தவர்களின் பகுதி மக்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, இதனைக்கட்டுப்படுத்த இராணுவ பீரங்கிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.எனினும், தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சபா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

monkey1

Related posts: