பாடசாலையில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி: அமெரிக்காவில் பாடசாலை மாணவன் வெறிச்செயல்!
Saturday, May 19th, 2018
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளியில் பள்ளி அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படகின்றது. மேலும் பலர் காயம் அடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரியும் சுடப்பட்டதாக தெரிகிறது.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவன் பள்ளி மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவனை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
அமெரிக்காவில் சமீபகாலமாக பாடசாலைகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் நடந்த 3வது சம்பவம் இதுவாகும். கடந்த பெப்ரவரி மாதம் புளோரிடாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள்.
Related posts:
|
|
|


