பிரதமர் பதவிக்கான போட்டி இறுதிகட்டத்தில்!

Friday, June 21st, 2019

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பேர் இந்த போட்டியில் முன்னிலையாகி இருந்த நிலையில், கட்டம் கட்டமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம், நேற்று இறுதி இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டனர். முன்னாள் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜோன்சன் மற்றும் தற்போதைய வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ட் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சனுக்கு 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். ஜெரமி ஹன்டிற்கு 77 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தற்போது அவர்கள் இருவர் தொடர்பிலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒருலட்சத்துக்கு 60 பேராளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதன் பெறுபேறு ஜுலை மாத இறுதியில் வெளியாக்கப்படும்.

இந்த வாக்கெடுப்பில் வெற்றிப் பெறுகின்றவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானிய பிரதமராகவும் தெரிவு செய்யப்படுவார்.

Related posts: