பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்!
Saturday, May 4th, 2024மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (3) மாலை 6.16 மணியளவில் பிலிப்பைன்ஸின் டுலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில், 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளில் குறித்த நில அதிர்வானது வலுவாக உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சீனாவை புரட்டிப்போட் வெள்ளம்: ஊகான் நகரம் பாதிப்பு!
சிரியாவால் இரசாயனத் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்கா !
முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|