பாகிஸ்தான் போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது தாக்குதல்: 50 பேர் பலி?
Tuesday, October 25th, 2016பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதி நகரான குவெட்டா நகருக்கு வெளியே அமைந்திருந்த உள்ள ஒரு போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த ஏறக்குறைய 50 போலீஸ் படை பயிற்சி பெறுபவர்களும், காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த போலீஸ் பயிற்சி கல்லூரியின் விடுதியின் உள்ளே நுழைந்த தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இச்செய்தியறிந்த அரசுத் துருப்புக்கள் இங்கு விரைந்து ஒரு துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தாங்கள் மேற்கொண்டதாக எந்த குழுவும் இது வரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுவாதி படுகொலை தொடர்பான உண்மை குற்றவாளிகளின் பெயர் மற்றும் விலாசத்தை வெளியிட்டார் தமிழச்சி!
வளைகுடா இராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம் - ட்ரம்ப்!
ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது!
|
|