பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த பேஸ்புக் நிறுவனம்!

Wednesday, July 19th, 2017

பேஸ்புக் கணக்குகளுடன், அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் மறுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஒன்றான, பேஸ்புக்’கில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ‘இ – மெயில்’ முகவரி மூலம் பேஸ்புக்கில் சேருகின்றனர். இதில், தங்கள் எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் நிர்வாகத்துக்கு பாகிஸ்தான் அரசு சில குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் விடுத்திருந்தது. அதில், பேஸ்புக் பயன்படுத்துவோரில் சிலர் வெளியிடும் கருத்துக்களால் சமூகத்தில் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கலவரமாக மாறி பெருமளவு உயிர் பலி ஏற்படுகிறது

சர்சசைக்குரிய கருத்துக்களை வெளியிடுவோரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பேஸ்புக் கணக்குகளில் அதை பயன்படுத்துவோரின் மொபைல் போன் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு விடுத்திருந்தது. ஆனால், பேஸ்புக் நிர்வாகம், இதை ஏற்க மறுத்து விட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு பேஸ்புக் அனுப்பிய கடிதத்தில், “பேஸ்புக் கணக்கில் அதன் பயன்பாட்டாளர்களின் மொபைல் எண்ணை இணைப்பது சாத்தியமில்லை. இ – மெயில் முகவரி மூலம் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்து என தெரிந்தால் அதை நாங்களே நீக்கி விடுவோம்” என பதிலளிக்கப்பட்டுள்ளது.

Related posts: