பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.
Tuesday, February 6th, 2024பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வாழ்நாள் முழுவதும் சீன ஜனாதிபதி இருக்கவுள்ள சீன ஜனாதிபதி!
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|