இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்கிது இலங்கை!

Friday, January 15th, 2021

இந்தியாவில் இருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தவுள்ள தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கொரோனா தடுப்பூசிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டே வருகின்றது, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்த தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் இங்கிலாந்தின் “ஒக்ஸ்போர்ட் – அக்ஸ்டோனிக் தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது, இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கை ஒன்று கைச்சாதிட்டப்பட்டுள்ளதை அடுத்து எம்மால் இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுகொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளோம்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இதற்கான உடன்படிக்கை மட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும், வெகு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் இலங்கையில் நாம் என்ன செய்ய வேண்டும், களஞ்சியப்படுத்துவது எவ்வாறு உளடளிட்ட ஆராய்வு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: