முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள் மீட்பு – பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!
Thursday, September 17th, 2020பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் - வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!
4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!
|
|