படகு கவிழ்ந்து விபத்து : 11 பேர் பலி!
Friday, July 20th, 2018அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலியாகினர்.
டேபிள் ரொக் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 30 பேர் வரையில் பயணித்துள்ளனர். இதில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் 7 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
INCIRLIK விமானத்தள பிரச்சினைக்கு அமெரிக்காவின் ஆதரவை நாடும் ஜேர்மனி
கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை!
|
|