நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!
Thursday, December 29th, 2022வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி கவுண்டியில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் என்று கவுண்டி நிர்வாகி மார்க் பொலன்கார்ஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
உயிரிழந்வர்களில் 3 பேரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் வீசிய புயல், எட்டு மாநிலங்களில் குறைந்தது 60 பேரைக் கொன்றது.
1977இன் பிரபலமற்ற பனிப்புயலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, கடந்த சில நாட்களில் எரி கவுண்டியில் இப்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த புயலில் இருபத்தி ஒன்பது பேர் இறந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
Related posts:
துருக்கி இராணுவ புரட்சி: கனேடிய மதகுரு ஒருவர் கைது!
இலங்கை - கனடாவுக்கு இடையே இரு தரப்பு பேச்சுவார்தை!
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு - எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் - நாடாளும...
|
|