எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை – அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்பு!

Sunday, September 12th, 2021

எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும் நாட்டில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சனிக்கிழமைகளில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர...
மக்கள் பணத்தை ஏப்பமிடுகிறது மாநகர சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் “என்ரபிரைஸ் ஶ்ரீ...
இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யு...