பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தடை!

Wednesday, July 19th, 2017

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மறு அறிவித்தல் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள முடிவினை ஏற்றுக் கொள்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“இது தொடர்பாக முழுமையான விசாரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும் ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

இந்த ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். அதே நேரம் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தயக்கமும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் தயாராக இருக்கின்றேன்.ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts:


வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை - ஆள...
ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் - ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கட...
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம் - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ப...