மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கவும் நிதி ஒதுக்கியது!

Saturday, May 6th, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை தற்போ​தைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் படையொன்று நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு பாரிய எதிர்ப்பு உள்ளதாகவும் சீ.பி. ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் இருந்ததில்லை - அமைச்சர் ...
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் - விவசாய சேவைகள் திணை...
அரச குடியிருப்புகளில் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் - சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பில் ...