தேடும் பணிகள் இடைநிறுத்தம் – அமெரிக்க அதிகாரிகள்!

Monday, August 7th, 2017

அவுஸ்திரேலிய கரையோர கடலில் விபத்திற்கு உள்ளான வாநூர்தியில் இருந்து காணாமல் போன மூன்று அமெரிக்க கடற்படை தரப்பினரை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் குறித்த விபரங்கள் மூன்று கடற்படைத்தரப்பினரின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுவாநூர்தியில் பயணித்த 23 பயணிகள் மீட்பு குழுவினரால் முன்னர் மீட்கப்பட்டிருந்தது. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: