தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எகிப்தில் 12 படையினர் பலி!
Saturday, October 15th, 2016
எகிப்தின் சைனாய் தீபகற்பத்தில் உள்ள இராணுவ சோதனைசாவடி மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ர் அல்-அப்த் நகர் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் எட்டு படையினர் காயம் அடைந்துள்ளனர்.சைனாயில் சமீப நாட்களில் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினருடன் தொடர்பில் உள்ள உள்ளூர் குழு ஒன்று தீவிரவாதிகளை வழிநடத்தி உள்ளது.

Related posts:
உக்ரைன் உள்நாட்டுச் மோதலில் 9,333 பேர் உயிரிழப்பு!
தொடரும் கொரோனாவின் ஆதிக்கம் - ஒரு இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!
இலங்கையுடன் டொலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ளப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல்!
|
|
|


