இலங்கையுடன் டொலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ளப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல்!
Friday, March 3rd, 2023இலங்கை ரூபாவில் ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்தி இலங்கையுடனான தமது முதல் டொலர் அல்லாத பரிவர்த்தனையை இன்று மேற்கொண்டதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறைக்குள் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த பரிவர்த்தனை இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர், டொலர் பற்றாக்குறையால் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு!
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் - பொதுநலவாய அமைப்பு வலியுறுத்து!
கல்வியாண்டுக்கான பாடநூல்கள் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர்...
|
|