தாய்வானில் புகையிரம் விபத்து – 36 பேர் உயிரிழப்பு!

Friday, April 2nd, 2021

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் புகையிரதம் தடம்புரண்டதில் இடம்பெற்ற விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 72 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமே சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் சுமார் 350 பேர் ரயிலில் பயணித்ததாகவும் அந்நாட்டு புகையிர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், வடகிழக்கு தாய்வானில் ஒரு புகையிரதம் தடம் புரண்டதில் 18 பேர் இறந்தனர் மற்றும் 175 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: