ஜெயலலிதாவை பார்க்கவில்லை:  விசாரணையில் உண்மை  சொல்ல தயார்: அமைச்சர் நடராஜன்!

Monday, October 9th, 2017

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நான் பார்க்கவில்லை என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் அவரை பார்க்கவில்லை. நாங்கள் அப்பல்லோ மருத்துவமனையின் 2வது தளம் வரையே சென்றோம். அதற்கு மேல் செல்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றார்..

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் என்னை விசாரணைக்கு அழைத்தால், ஆணையம் முன்பு ஆஜராகி உண்மையை எடுத்து வைப்பேன் என்றும் விசாரணைக்கு அமைச்சர்களை அழைத்தால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து நடைபெற்றுள்ள அனைத்து விவகாரங்களையும் தெரிவிப்பார்கள் என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையையும், நடராஜன் சிகிச்சையையும் ஒப்பிட்டு பேசக் கூடாது. பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சென்று சந்திக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts: