90 யானைகளின் சடலங்கள் மீட்பு!
Wednesday, September 5th, 2018பொட்சுவானாவில் உள்ள வனம் ஒன்றில் 90க்கும் அதிகமான யானைகள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிகமான யானைகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அங்கு யானைகள், தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்ற நிலைமையும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை சில வாரங்களுக்கு முன்னர் தந்தங்களுக்காக கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வனத்தில் ஐந்து வெள்ளை காண்டாமிருகங்களும் அவற்றின் கொம்புகளுக்காக கொல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யானைகள் பராமரிப்பு அமைப்புகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன.
Related posts:
பிரித்தானியாவில் கடிகார நேரம் மாற்றம்!
பயங்கர காட்டுத்தீ - ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்!
கொரோனா தாக்கத்தின் எதிரொலி: ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எயார் கனடா!
|
|