துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு!

Thursday, March 16th, 2023

கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து கூடாரங்களிலும் தற்காலிக கொள்கலன் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் உள்ளிட்ட தொடர் நிலநடுக்கங்களில் சுமார் 48,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்ககது

000

Related posts: