ஜனாதிபதி அலுவலக முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடி மாற்றம்!
Sunday, July 23rd, 2017
ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் எதிர்வரும் 25ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகிய பதவிகளுக்கே புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பொது நிறுவனங்களின் சபைத் தலைவராக இருந்த சஞ்சை கோத்தாரி ஜனாதிபதியின் செயலாளராகவும், குஜராத் மாநில பிரிவு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான பாரத் லால் ஜனாதிபதியின் இணைச் செயலாளராகவும், மூத்த பத்திரிக்கையாளர் அசோக் மாலிக் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரிகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுக்காலம் பதவியில் நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|