அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் – வடகொரியா!

Friday, September 22nd, 2017

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகொரியா தான் செய்வது தான் சரி என்பது போல், தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அத்து மீறி செயல்படும் வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் என்று கடந்த 19-ஆம் திகதி ஐ.நா. பொதுசபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் இந்த பேச்சு நாய் குரைப்பதை போல் என்று வடகொரியா வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில், நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என டிரம்ப் நினைப்பது நாயின் கனவு போன்றது என கூறியுள்ளார்.வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொது சபையில் ரி யோங் ஹோ கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: