சீனா – இந்தோனேஷியா பாதுகாப்பு ஒத்திகை!
Sunday, March 27th, 2016இந்தோனேஷியா நடத்தும் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதற்காக சீனக் கப்பல்கள் புறப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தென் சீனக் கடலில் சர்சைக்குரிய ஒரு பகுதி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாக சர்ச்சை வெடித்த நிலையில் இந்த கூட்டு ஒத்திகை நடைபெறுகிறது. கடந்த வாரம், சர்சைக்குரிய பகுதியில் சீனப் படகு ஒன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்தோனேஷிய ரோந்துக் கப்பல் ஒன்று அதனைத் தடுக்க முயன்றது. அதனை சீன கடலோரக் காவல் படையின் கப்பல் எதிர்த்தது.
இந்த சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க இந்தோனேஷியா மறுத்துவருகிறது. ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்கின்றன.
Related posts:
பெய்ஜிங்கில் நச்சுப்புகை காரணமாக 5 நாட்களுக்கு அதி உயர் எச்சரிக்கை!
பாரிஸ் தாக்குதல்தாரிக்கு 500 யூரோ வழங்கிய பிரான்ஸ்: அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றாளர்...!
|
|