சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 5th, 2017

சீனாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் 11 மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை பெய்து வருகிறது.

செஜியாங், அன்ஹுயி, ஜியாங்சி, ஹுபேய், ஹுனான், குவாங்டாங், சோங்கிங், சிச்சுவான், கிஸோ, யுன்னான், தன்னாட்சி உரிமை பெற்ற குவாங்சி ஸுவாங் மாகாணங்களில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

ஹுனான் மாகாணத்தில் உள்ள கிசியாங்ஜியாங் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. முந்தைய மழைக்காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு 39.51 மீட்டர் உயரத்திற்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இந்த மாகாணத்தில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள சுமார் 27,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், 37,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்ததாக சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஹுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் சுமார் 3,000 இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி காணாமற்போயுள்ள 22 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெள்ளத்தால் சீனாவில் சுமார் 2500 கோடி யுவான் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1880 கோடி யுவான்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts: