சீனாவில் கட்டடங்கள் இடிந்து 22 பேர் பலி!

Wednesday, October 12th, 2016

கிழக்கு சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று இடம்பெற்ற இந்த திடீர் அனர்த்தத்தில் சென்ஜியாங் மாகாண வென்கூ நகரில் இருக்கும் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாக சீனாவின் சின்ஹோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

1970களில் ஊர் மக்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டடங்கள் மோசமான நிலையில் இருந்துள்ளன. இதில் மலிவான வாடகைக்கு அறைகள் எடுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்களே பெரும்பாலும் கொல்லப்பட்டுள்ளனர்.

“மலிவான வாடகைக்காக இவர்கள் தமது உயிரை தியாகம் செய்திருப்பது பயங்கரமானது” என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆறு பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

coltkn-10-12-fr-02170627320_4876036_11102016_mss_cmy

Related posts: