சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மாரில் மீண்டும் தாக்குதல்!

Wednesday, May 2nd, 2018

மியன்மாரின் கச்சின் பகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை நிபுணர்கள் இன்று இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். கச்சின் பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் ஆபத்தான ஆயுதங்களை கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக இதுவரையில் நூற்றுக்காணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மியன்மாரில் உள்ள ஐக்கியநாடுகளின் மனித உரிமை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: