பூமியை போன்று புதிதாக 7 கோள்கள் உள்ளதாக நாசா அறிவிப்பு!

Thursday, February 23rd, 2017

விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா புதிதாக 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 3 கோள்கள் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டதகவல்,

புதிதாககண்டு பிடிக்கப்பட்டுள்ள 7 கோள்களில் 3ல் வசிப்பதற்கு ஏற்றவகையில் உள்ளது.3 கோள்களில் நீர் ஆதாரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. ஸ்பிட்செர் மூலம் இந்த புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

முன்னதாக விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி  செய்தியளார்கள் சந்திப்புக்கு தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்விகேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை உலகெங்கிலும் இருந்து 6 கோடி பேருக்கும்அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதியமைல்கல்லாக கருதப்படுகிறது.

nasa2-23-1487793183

Related posts: