சிட்னியில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை!
Tuesday, July 30th, 2024
அவுஸ்திரேலியா – சிட்னியில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வயது எல்லையை 16ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அங்குள்ள பல அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
13 வயதுக்குட்பட்டவர்கள் அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அவர்களிடையே மன ரீதியான பாதிப்புக்கள் அதிகம் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களை அதிகமாக அல்லது தவறாகப் பயன்படுத்துவது அவ்வயதினரிடையே உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்
Related posts:
ஃபலூஜா நகரம் மீட்கப்பட்டது - ஈராக் பிரதமர் !
ஒமான் கடற்பிராந்தியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள ஹிக்கா !
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
|
|
|


