ஃபலூஜா நகரம் மீட்கப்பட்டது – ஈராக் பிரதமர் !

Monday, June 27th, 2016
ஐ.எஸ் போராளிகளிடமிருந்து ஃபலூஜா நகரை மீட்டுவிட்டதாகவும், இது குறித்து ஈராக் மக்கள் மகிழ்ச்சியடையலாம் என்றும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபடி அறிவித்துள்ளார்.
பலூஜா நகரின் முக்கிய மருத்துவனை ஒன்றின் வெளியே, ஈராக் நாட்டு கொடியை அசைத்தவாறு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் அபடி. ஐ.எஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய நகரான மொசூலில், பாதுகாப்பு படையினர் ஈராக் கொடியை உயர்த்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஈராக் அரசு இதே போன்று, பலூஜா நகரை விடுவித்ததாக கூறியிருந்தது ஆனால் தெருக்களில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: