கொவிட்-19 : அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம்!
Wednesday, February 26th, 2020உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் பரவலை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான நிதியை ஒதுக்குமாறும் குறித்த அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் இத்தாலி மற்றும் தென் கொரியாவில் 10 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
இதுவரையில் தென் கொரியாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக 1146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இத்தாலியிலும் 322 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிலிப்பைன்ஸில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
புகைப்பிடிப்போரை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ் - எச்சரிக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழகமொன்றின் ஆய்வு!
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்கா...
|
|