கொவிட்-19 : அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம்!
Wednesday, February 26th, 2020
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிற்கும் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வைரஸ் பரவலை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்கான நிதியை ஒதுக்குமாறும் குறித்த அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் இத்தாலி மற்றும் தென் கொரியாவில் 10 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
இதுவரையில் தென் கொரியாவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக 1146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இத்தாலியிலும் 322 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ்...
தொடரும் சீரற்ற காலநிலை - அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு!
|
|
|


