ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!
Tuesday, November 3rd, 2020
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்
Related posts:
வடக்கு மாகாண நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் - மாகாண கல்வி செயலாளர்!
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!
திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !
|
|
|


