ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!
Tuesday, November 3rd, 2020ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்
Related posts:
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: 9 பேர் காயம் தாக்குதல்தாரி சுட்டுக்கொலை!
ஒரே இலக்கம் இருவருக்கு : தேசிய அடையாள அட்டையில் முறைகேடு!
2.8 பில்லியன் ரூபா தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு - பொலிஸாரின் தேர்தல் செலவால் தேர்தல்கள் ஆணைக...
|
|