பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 இற்கும் அதிகமானோர் பலி!
Sunday, May 24th, 2026
…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் (Quetta) இன்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈத் பண்டிகையை முன்னிட்டு குவெட்டா ராணுவ முகாமில் இருந்து பெஷாவர் நோக்கி வீரர்கள் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிவிபத்தின் தீவிரத்தால் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலைப்படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.
000
Related posts:
துருக்கி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு! 65 பேர் பலி!!
ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விபத்து - இத்தாலியில் பயங்கரம்!
அனர்த்த நிவாரணங்களுக்கு பிரதமர் நிதியுதவி!
|
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் ...
இலக்கினை வெற்றி கொள்ள இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி - வெற்றியை அமை...
ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு - மூவரடங்கிய குழுவொன்ரற நியமித்த ஜனாதிபதி உ...


