கொரோனா வைரஸ் : சீனாவில் 1,665 பேர் பலி: 69,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Tuesday, February 18th, 2020

சீனாவின் வுகான் நகரில் தோன்றி நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதிகமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அங்கு கடைசியாக வெளியான தகவல்படி 1,665 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தென்கொரியா, மலேசியா என பல சர்வதேச நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அப்படி சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஹாங்காங்கில் 57 பேர், ஜப்பான் (டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் உள்பட 412 பேர்), சிங்கப்பூர் (72), இந்தியா (3), அமெரிக்கா (15), அவுஸ்திரேலியா (14), பிரான்ஸ் (12), இங்கிலாந்து (9), கனடா (8), பிலிப்பைன்ஸ் (3) என பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.

இதில் ஜப்பான், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: