கொரோனா சிகிச்சை நிலையத்தில் பற்றிய தீ –7 நோயாளிகள் பலி!

Sunday, December 27th, 2020

எகிப்தில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை இந்தத் தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

குறித்த வைத்தியசாலையின் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவிதை தொடர்ந்து நோயாளிகள் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 நோயாளிகள் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts: